×

ஊழியர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை: பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுப்படும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அந்தந்த செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதே சமயம் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு போராட்டம் செய்யும் நாள் பணி விடுப்பு நாளாக கருத்தில் கொள்ளப்படும். இதை விடுமுறை நாளில் கழித்துக்கொள்ள முடியாது. மாறாக அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிக்கு வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள் தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post ஊழியர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Electrical Board ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...